எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் இரசாயன பதார்த்தம், உரிய அளவில் இல்லாதமை காரணமாகவே, எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனையை இடைநிறுத்துமாறு அறிவித்ததாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் எதில் மெகப்டன் (Ethyl Mercaptan) கொள்கலனில் 14 அலகுகளாக இருக்கவேண்டிய நிலையில், அது தற்போது 5 அலகுகளாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே, எரிவாயு கொல்கலன் விநியோகத்தை இடைநிறுத்துமாறு லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.