நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலைப் பகுதிக்கு சென்ற கார் ஒன்று, நுவரெலியா- ஹட்டன் பிரதான வீதியில் சென்.கிளயார் பகுதியில் வீதியை விட்டு விலகி, சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த கார் சாரதி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவரே காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி மதுபானம் அருந்தியிருந்ததாகவும், இதனால் அவரின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.