இடமாற்ற பிரச்சினை காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மத்திய குழுக் கலந்துரையாடல் இன்று(17) இடம்பெறவுள்ளதாக அதன் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இன்று பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், மன்னார், அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்தியர் செனால் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.