திருகோணமலை, தம்பலகாமம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை 96 ஆம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் தளத்தில் பலியாகியுள்ளதாக காவற்துறைர் தெரிவித்தனர்

குறித்த சம்பவம் இன்று (27)காலை இடம் பெற்றுள்ளது. 

திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் ,திருகோணமலையை நோக்கி மண்கலந்த சிறிய கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகன சாரதி தளத்திலேயே உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தினால் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்ததுடன் பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்கள் வீதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது  வைத்தியசாலையின் பிரேத அறையில்  வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் காவற்துறைர் முன்னெடுத்து வருகின்றனர்.