பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
குறிப்பாக இம்ரான்கான் அந்நாட்டின் ‘பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை போன்றவற்றில் மிகவும் தவறான முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறி ‘பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து,அந்நாட்டில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில்,பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை MQM (The Muttahida Qaumi Movement) கட்சி விலக்கிக் கொண்ட நிலையில்,எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக MQM கட்சி அறிவித்துள்ளது. இதன்காரணமாக இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
MQM கட்சி அறிவிப்பால் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்து இம்ரான்கான் அரசின் பலம் 164 ஆக குறைந்துள்ளது.இதனால்,உடனே பதவியை விட்டு இம்ரான்கான் விலக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.