திரை விலகி படம் ஆரம்பிக்கும் போதெல்லாம்
காணாமல் போகிறேன்
மற்றுமொரு மாயத்திரைக்குள்

யூகலிப்டஸ் மரங்களின் நடுவே வேகிக்கொண்டிருக்கும் சில மாமிசத் துண்டங்களிலிருந்து வெளியேறும் ஆரஞ்சு நிறப்புகையில்
ஆல்கஹோலின் வாசனையோடு
ஹோலோ கிராமில் தெரிந்தான் அவன்

சமுத்திரத்தின் நீரற்ற பரப்பொன்றில்
அண்டத்தின் அனைத்துக் காதலும்
விதைக்கப்பட்டிருந்தன
பட்சிகளை விரட்டும் வெருளிகள்
ஆதிக்காதலர்களின் மரவுரிகளால்
அலங்கரிக்கப்பட்டிருந்தன
அலாவுதீனின் விளக்கு
நியோனைக் கசியவிட்டுக்கொண்டிருந்தது

விரல்களில் நீட்சியும்
உடலில் கூனலுமாய்
முதல் முதலாய் சேலை உடுத்திய
ஏவாளின் கையில்
இரு நீலக்குயில்கள்..

          - நிம்மி சிவா -
               (05.01.2022)