காணாமல் போன நிலையில் கடந்த 2 தினங்களாகத் தேடப்பட்டு வந்த பதுளை – களன் தோட்டத்தைச் சேர்ந்த யுவதி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக வகுப்புக்குச் செல்வதாகத் தெரிவித்து வீட்டிலிருந்து சென்ற 18 வயதான குறித்த யுவதி மீள வீடு திரும்பாத நிலையில் அவர் காணாமல் போனதாக கஹட்டருப்ப காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில் நேற்றைய தினம் அவர் கொண்டு சென்ற புத்தகப்பை, கையடக்க தொலைப்பேசி மற்றும் அடையாள அட்டை என்பன கோபோ பகுதியிலுள்ள குளமொன்றிற்கு அருகில் மீட்கப்பட்டது.

எவ்வாறாயினும் குறித்த தொலைப்பேசியில் இருந்த சிம் அட்டை காணாமல்  போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் அவரது சடலம் இன்று குறித்த குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சடலம் பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதோடு கஹட்டருப்ப காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.