தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதன்படி குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து வந்தாலும், ஒமிக்ரோன் தொற்று குறித்த அச்சம் நிலவி வருகின்றது.

ஆகவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது