இந்தியாவின் பெரும் பகுதியை தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

பெரும்பாலான இடங்களில் வெப்பம் 40 டிகிரியை கடந்துள்ளது.

இதனால் மக்கள் வீட்டை விட்டே வெளியே வருவதை தவிர்த்து வீட்டிற்குள்ளேயே இருக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓடிசாவின் சோனேப்பூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் கார் பேனட்டில் சாப்பாத்தி போடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.