சேமியா என்றால் கிச்சடி அல்லது உப்புமா தான் செய்வோம். ஆனால், சேமியாவில் சுவையான பிரியாணி எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • சேமியா – கால் கிலோ
  • சிக்கன் – ¼ கிலோ
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • பட்டை- சிறிதளவு
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • தக்காளி – 1
  • எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
  • தயிர் – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 2
  • கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
  • மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்
  • சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
  • கரம் மசாலா – அரைடீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரைடீஸ்பூன்
  • முந்திரிப் பருப்பு – 25 கிராம்
  • உப்பு, நெய், எண்ணெய் – தேவைக்கேற்ப
  • மிளகாய்தூள், சீரகத்தூள், கரம் மசாலா,
  • மஞ்சள் தூள் தாளிக்க கிராம்பு, லவங்கப்பட்டை,
  • ஏலக்காய், சோம்பு

செய்முறை விளக்கம்

முதலில், சேமியாவை வறுத்து கொள்ளவும். அடுத்து சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை போட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.

பின்னர் முந்திரி, வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

தக்காளி, கொத்தமல்லி, புதினா, எலுமிச்சைசாறு, தயிர் வதக்கி கொள்ளவும்.

இதன்பின் சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் மிளகாய்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து வாசம் போகும் வரை அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் சேமியாவை போட்டு மூடி தம் போட்டு வைக்கவும்.

வெந்ததும் சூடான சுவையான சேமியா பிரியாணியை இறக்கி பரிமாறவும்…