பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள மருந்துகள் மற்றும் மயக்க மருந்துகளின் இருப்பு காரணமாக நாட்டில் உள்ள அனைத்து அவசர சத்திரசிகிச்சை நிலையங்களையும் தொடர்ந்து 90 நாட்களுக்கு பராமரிக்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களுக்கு இலங்கை ரூபாவில் செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் தொடர்பான உடனடி ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (25) சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.