வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர்களால் திருடப்பட்ட ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான நான்கு மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் 5 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்றபோது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீதுவ, வத்தளை, கந்தானை பகுதிகளில் இருந்து திருடப்பட்ட மேலும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஜா-எல, தண்டுகம பிரதேசத்தில் இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.