உணவு பழக்க வழக்கங்களில் மாற்றத்தை கொண்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும். அதேப்போல் குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதன் காரணமாக மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுகிறது.

உடலுக்குத் தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகளை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதால் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர், ஒரு தேக்கரண்டி நெய் போதும். ஆம், இது மிகவும் எளிது.

நெய்யில் பியூட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது மலச்சிக்கலை போக்க உதவும் என்று கூறப்படுகிறது. நெய் சிறந்த இயற்கை மலமிளக்கி. அத்துடன் எடை இழப்பு, தூக்கம் உட்பட எலும்பு வலிமையை அதிகரிப்பது போன்ற பிற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

முதலில், ஒரு தேக்கரண்டி நெய்யுடன் 200 மில்லி வெதுவெதுப்பான நீரை எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த பலன் கிடைக்கும்.

செரிமானப் பாதை, குடல் மற்றும் பெருங்குடல் கரடுமுரடாக, கடினமாக மற்றும் வறண்டதாக மாறும்போது மலச்சிக்கல் ஏற்படுகிறது.

அடுத்து, நெய்யின் லுப்ரிகேட்டிங் பண்புகள் அமைப்பை மென்மையாக்க உதவுகின்றன மற்றும் உடலில் இருந்து கழிவுகளை சீராக வெளியேற்ற உதவுகிறது.