மீட்பு, மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபடும் வகையிலான ரோபோ எலியை சீனாவினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
நடை, பாவனை ,கொறிக்கும் தன்மை ஆகியவை தவிர்த்து அச்சுஅசல் உண்மையான எலியைப் போன்றே பெய்ஜிங் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
குறுகிய இடைவெளி பகுதிகளில் நடத்தப்படும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ரோபோ நாய்களை விட இயந்திர எலிகள் மிகுந்த பயனளிக்கக் கூடியதாக இருக்கும்
என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக நாய், மீன் உள்ளிட்டவை ரோபோ முறையில் உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது புது முயற்சியாக ரோபோ எலியை விஞ்ஞானிகள் உருவாக்கி
உள்ளமை குறிப்பிடத்தக்கது.