பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் பெருநகர பிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் தமிழ் மரபுரிமை மாத பிரகடனத்திற்கு லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவை ஏகமனதாக இன்று அங்கீகாரம் வழங்கி வராற்று முக்கியத்துவத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரித்தானியாவின் NHSல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்னணி சுகாதார வல்லுநர்கள் என மதிப்பிடப்பட்ட 15,000 தமிழர்கள் பணிபுரிகின்றனர். தவிரவும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆசிரியர்களாகவும் ஆசிரியர் உதவியாளர்களாகவும் பிரித்தானிய பாடசாலைகளில் பணியாற்றுகின்றனர்.
பிரித்தானியாவின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் கட்டமைப்பிற்கு தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் லண்டன் மற்றும் லண்டன் பெருநகர மற்றும் நகராட்சி பிராந்தியங்களில் தமிழ் பாரம்பரிய மாதத்தை உறுதி செய்ய அழைப்பு விடுத்துள்ளதோடு, பொங்கல் (அறுவடை திருவிழா) போன்ற கொண்டாட்டங்களை குறிப்பிட்டு, லண்டன் முழுவதுமாக வாழும் மிகவும் மதிப்புமிக்க தமிழ் சமூகத்தை ஆதரிக்கப்பதாக இன்று லண்டன் மநாகர சபையில் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லண்டன் பெருநகர அவையின் கென்சவேட்டிவ் கட்சிஉறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தபிரேரணைக்கு அவையின் ஆளும், எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஆதரவு வழங்கியுள்ளனர். இந்தப் பிரேரணை மூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வருடா வருடம் ஜனவரி மாதத்தில் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் தமிழ் மரபுரிமை மாதம் கடைப்பிடிக்கும் சாத்தியங்கள் உருவாகியுள்ளன.
லண்டன் பெருநகர அவையின கென்சவேட்டிவ் கட்சி உறுப்பினர் நிக்கோலஸ் ரோஜர்ஸ் ஏஎம், என்பவரால் இன்று பிற்பகல் இந்தபிரேரணை முன்மொழியப்பட்டு அதன் பின்னர் இது விவாதத்துக்கு விடப்பட்டிருந்தது.
இந்த விவாதத்தில் அனைத்து உறுப்பினர்களும் பிரேரணைக்கான ஆதரவினைத் தெரிவித்த பின்னர், ஜனவரி மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாக Tamil Heritage Month ஆக பிரகடனப்படுத்தும் பிரேரனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.