இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயது பிரிவிற்கான காற்பந்தாட்ட தொடரில் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் கொழும்பு ஷாகிராக் கல்லூரிக்கும் இடையிலான இறுதியாட்டம் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

சமநிலை தவிர்ப்பு உதை மூலம் 04 க்கு 03 என்ற கோல் அடிப்படையில் ஷாகிராக் கல்லூரியை வீழ்த்தி அகில இலங்கை ரீதியில் 20 வயதுப் பிரிவில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிசம்பியனானது.

2022, 2023 என அடுத்தடுத்து இரண்டு தடவைகள் 20 வயதுப் பிரிவு காற்பந்தாட்டத்தில் சம்பியனான முதல் பாடசாலை என்ற பெருமையை சென் பற்றிக்ஸ் கல்லூரி பெற்றுக்கொண்டது.