1. கை,கால் விரல்களிலிருந்து சுடக்கு சத்தம் ஏன் கேட்கிறது என்று தெரியுமா?

இந்த சத்தம் உங்கள் எலும்பில் இருந்து வருவது கிடையாது. அந்தப் பகுதிகளில் இருக்கும் நைட்ரஜன் வாயு குமிழ்கள் (Nitrogen Gas Bubbles) வெடிப்பதனால் சுடக்கு சத்தம் நமக்கு கேட்கிறது.


2. தென்‌ கொரியாவாவை சேர்ந்த Kim Ungyong என்பவர்‌தனது 3 வயதிலேயே கொரியன்‌, ஜெர்மன்‌, ஆங்கிலம்‌மற்றும்‌ ஜப்பானியம்‌ என 4 மொழிகளையும்‌, கால்குலஸ்கணக்குகளையும்‌ கற்றுக்கொண்டார்‌. 4 வயதில்‌ இயற்பியல்‌ துறை விருந்தினர்‌ மாணவராக ஹன்யாங் பல்கலைக்கழகம் இவரை அழைத்தது. 7 வயதில்‌அமெரிக்காவுக்கு நாசா இவரை அழைத்தது.இறுதியாக 15 வயதில்‌ தனது Ph.D பட்டத்தை பெற்றார்‌.கின்னஸ்‌ புத்தகத்தில்‌ அதிக IQ திறன்‌ கொண்டவர்கள்‌பட்டியலில்‌ இவர்‌ இடம்பெற்றுள்ளார்‌.


3. உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் பாலம். செனாப் ஆறுக்கு மேலே 1178 அடி உயரத்தில் இந்தப் பாலம் அமைந்துள்ளது.


4. ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் மனிதர் அல்லாத திரை கதாபாத்திரம் மிக்கி மவுஸ்.


5. பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை 10 சதவீதம் பெரியது. ஆனால் ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளையின் செயல்திறன் அதிகம்.


6. Krista மற்றும் Tatiyana Hogan இருவரும் கனடா நாட்டை சேர்ந்த தலைகள் இணைந்த இரட்டையர்கள். இவர்களில் ஒருவர் கண்களால் பார்ப்பது, மனதில் நினைப்பது எல்லாம் இன்னொருவருக்கும் தெரியுமாம்..!


7. காதில் உள்ள ஸ்டாப்ஸ் (Stapes) என்ற எலும்பு தான் மனித உடலில் மிகவும் சிறிய எலும்பு ஆகும்.


8. துபாயில் உள்ள பாம் ஜுமேரா தீவு தான் உலகிலேயே மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவு ஆகும். இந்தத் தீவு ஒரு பனை மரத்தின் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.


9. மனிதனால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் செம்பு. மனிதர்கள் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே செம்பை பயன்படுத்தி வருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.


10. உலகின் மிக நீளமான பெயரைக் கொண்ட ஊர் நியூசிலாந்து நாட்டில் உள்ளது. இந்த ஊரின் பெயர் Taumatawhakatangihangakoauauotamateaturipukakap ikimaungahoronukupokaiwhenuakitanatahu ஆகும். இந்தப் பெயரில் மொத்தம் 85 எழுத்துக்கள் உள்ளன!அடேங்கப்பா!


11. உலகில் உள்ள அனைத்து பாண்டா கரடிகளும் சீன நாட்டு அரசுக்கே சொந்தமானது! சீனாவை தவிர நீங்கள் மற்ற நாடுகளின் Zoo-களில் பார்க்கும் பாண்டா கரடிகள் அனைத்தும் சீன அரசிடம் இருந்து கடனாக வாங்கப்பட்டவை தான்! 


12 தேனீக்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்தால் தான் நமக்கு ஒரு டீஸ்பூன் தேன் கிடைக்கும்.


13. அதில் உள்ள சன் டூங் (Son Doong) குகை தான் உலகிலேயே மிகவும் பெரிய குகை ஆகும். இந்த குகைக்குள்ளேயே தனி நதி, காடு, காலநிலை எல்லாமே உள்ளன. இந்த குகை சுமார் 3 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.


14. மனிதர்கள் இரவில் கண்ட கனவுகளில் 90 முதல் 95% கனவுகளை பகலில் கண் விழிக்கும்போது மறந்து விடுவார்கள்.


15. மனித உடலில் காது மற்றும் மூக்கு ஆகிய இரண்டு உறுப்புகளும் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.


16. ஒரு நீலத் திமிங்கலத்தின் எடை என்பது 30 யானைகளின் எடைக்கு ஈடானது. ஒரு யானையின் எடை என்பது நீலத் திமிங்கலத்தின் நாக்கின் எடைக்கு மட்டுமே ஈடானது!


17. உலகில் தற்போது வாழும் மிக உயரமான மனிதர் துருக்கி நாட்டைச் சேர்ந்த சுல்தான் கோசென். புதிய விவசாய தொழில் செய்து வருகிறார். தற்போது 38 வயதான இவரது உயரம் 2.52 மீட்டர் ஆகும்!


18. இந்தியாவின் முதல் உணவு தானிய ஏடிஎம் இயந்திரம் ஹரியானா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்திற்கு அன்னபூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது.


19. உங்கள் மூளை சுமார் 12 – 25 watts மின்சாரத்தை உருவாக்குகிறது. குறைந்த வாட்டேஜ் கொண்ட LED Bulb ஐ இயக்க இதுவே போதுமானது!


20. நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பும் அளவிற்கு உமிழ்நீரை உங்கள் வாயில் உற்பத்தி செய்கிறீர்கள்.