சுதந்திரப் பேரொளியே வாழ்க!கார்த்திகை இருபத்தாறு …எங்கள் விடியலின் ஏந்தல்பிறந்த தினம் …அடிமைச் சுழியின் ஆழத்தில் மூழ்கியதமிழீழ இறைமையின்சுதந்திர ஒளியை ஏற்றப் பிறந்தபேரொளியின் எழுச்சியின் தினம் …பார்வதித் தாயெனும் பெருமாட்டிதர்மத்தின் தவத்தில் மூழ்கி“பிரபாகரன்”எனும் வீரசக்தியைதமிழருக்காய் தந்த தினம் …வாழ்க பல்லாண்டு! தமிழீழத் திருமகனே!வாழ்க நீடுழி !தமிழீழத் தலைமகனே!பேரொளியே விறல் வீச்சே!நீ பிறந்த போதுமுதல் முதல் காற்றோடு மோதிஎழுப்பிய சத்தம் …அழுகை அல்லஅது …இந்த பிரபஞ்ச சக்தியோடுநீ போரிட்ட முதல் உறுமல் …செந்தேனே!உன் தாயின் பாச அணைப்பில் மூழ்கிநீ சிரித்தது எதற்காக?…அம்மா வந்துவிட்டேன் …இந்த கொடியோரை வதம் செய்ய …என்பதற்காய்!உன் பிறப்பின் இரகசியம் அறிந்தவள்தமிழ்த் தாய் அல்லவா!பார்வதித் தாயின் அக்கினிக் கருவறையில்உன்னைக் காத்தவள் அவள்தானே!நீ வீரமெனும் மகாசக்தியைதமிழரில் ஏற்றப் பிறந்தஅணுஉலையின் வீச்சல்லவா!வாழ்க பல்லாண்டு! தமிழீழத் திருமகனே!வாழ்க நீடுழி!தமிழீழத் தலைமகனே!வளர்ந்தாய்! நிமிர்ந்தாய்! எழுந்தாய்!உன் இளமையின் உறுமல் ஒலியுடன் …அது …தமிழரின் அடிமை விலங்கில்ஓங்கி அடித்தது விலங்கு சிதறிட …வீரப்படையல் பதித்தது தமிழீழத்தில் …நீ … எத்தனை புரட்சி விதைகளைஊன்றினாய் தமிழீழத்தில் …உன் விழி சென்ற பார்வையாவும்வீரவீச்சாய் நிமிர்ந்தது …வாழ்க பல்லாண்டு! தமிழீழத் திருமகனே!வாழ்க நீடுழி!தமிழீழத் தலைமகனே!தமிழீழப் போரின் …மூலவேராய் நிற்பது உன் மகாசக்தி …எத்தனை புயல்கள் … எத்தனை ஊழித்தீக்கள் …உறுதிதளரா திறன் …கருஞ்சுழியின் தவம் …பேறு பெற்றவர்கள் உலகத் தமிழர்கள்உன்னைப்போன்றோரு மகாசக்தியைப் பெற …ஓர் அரசின் முழுக் கட்டமைப்பைஉருவாக்கிய திறன்!மழுங்கிய தமிழரின் வீரமரபைநாணேற்றிய உரம்!தமிழரின் பண்பாட்டைவழுவாமல் காத்த தவம்!தமிழரின் தொன்மையைஉலகிலே பதித்த அறம்!வாழ்க பல்லாண்டு! தமிழீழத் திருமகனே!வாழ்க நீடுழி!தமிழீழத் தலைமகனே!மௌனம் இருள் போன்ற தன்மை உடையது …இருள் …அதன் ஆழத்தை வெளிப்படுத்தாததுகருமைக்குள் இருப்பதை யாரறிவார்?தலைவரின் மௌனிப்பின் ஆழத்தை யாரறிவார்?உலகத்தின் புருவங்கள் வியந்தவண்ணம் நிமிர்கின்றது …“பிரபாகரன்” இந்தப் பெயரின் சக்தி …உலக வரைபடத்தில் ஓர் புள்ளயிலுள்ள தமிழீழத்தை …அடையாளம் காட்டும் மகாசக்தியாக காட்டி நிற்கிறது …செந்தமிழ்மறவனே! செவ்விழியோனே !நீ பதித்த விடியலின் பாதையின் தடம்பதித்துதமிழீழத் தாயக உறுதியை இறுக்கப் பற்றிநின்வழி செல்வோம் .வாழ்க பல்லாண்டு! தமிழீழத் திருமகனே!வாழ்க நீடுழி!தமிழீழத் தலைமகனே!